October 2025

                                                 வடமேற்கு மண்டலம்



அக்டோபர் : 22 ராம்நகர் மற்றும் கோடாசஹன் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இளைஞர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில் 115 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்று, தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். ராம்நகர், பைரியா, கோடாசஹன் மற்றும் பைரோகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஞாயிறுப் பள்ளிகளில் சுமார் 160 சிறுவர் சிறுமியர் பங்கேற்றுவருகின்றனர். பக்ஹா பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவர் பின்தொடர் ஊழியத்தின் மூலமாக 55 சிறுவர் சிறுமியரைச் சந்தித்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தள விசுவாசிகள் கிறிஸ்துவில் நிலைத்து நிற்கவும், சிறுவர் சிறுமியர் வாயிலாக அவர்கள் குடும்பங்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 23 ஜகதீஷ்பூர், பைரியா, ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டங்களில் சுமார் 300 பேர் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசம் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். பக்ஹா, பைரோகஞ்ச், ராம்நகர், பேரஹனி, சியூட்டஹா மற்றும் நர்கட்டியாகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் கடந்த மாதம் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக, சுமார் 700 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 18 பேர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

அக்டோபர் : 24 நைத்தன், மஜௌலியா, பக்ஹா, சுகௌலி, யோகாபட்டி, ஹசன்பஜார் மற்றும் சபாபூர்  ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களில் சுமார் 600 பேர் பங்கேற்றனர். பெண்கள் மூலமாக பணித்தள கிராமங்களில் கிறிஸ்துவின் சாட்சி பரவவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில், ஆலயத்திற்கான நிலங்கள் வாங்கப்படவும், விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 25 பேரஹ்னி பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்றனர்; 5 குடும்பத்தினர் புதிதாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, செப்டம்பர் 5 அன்று பைரோகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 50 குடும்பத்தினரும், செப்டம்பர் 8 அன்று சன்பட்டியா மற்றும் சாத்தி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 10 குடும்பத்தினரும் பங்கேற்றனர். வசனத்தின்படி குடும்ப வாழ்க்கையை வடிவமைப்பது குறித்த போதனை பங்கேற்றோர்க்கு பயனளித்தது. 

அக்டோபர் : 26 பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள், வேத வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களுக்காகவும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார்.  




SEP 2025

                                             வடமேற்கு மண்டலம்


செப்டம்பர் 21 பெத்தியா, சன்பட்டியா மற்றும் பைரோகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 180 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில் வேத வசனத்தின் அடிப்படையில் வாலிபத்திற்கேற்றச்  செய்திகளும் மற்றும் நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.  மேலும், சுகௌலி, ஷாபூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளில் 155 வேர் பங்கேற்றனர். ஆகஸ்ட் 13 அன்று மஜௌலியா பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் மழையின் மத்தியிலும் 95 பேர் பங்கேற்று தேவ வார்த்தையைக் கேட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் வாலிபர்கள் மற்றும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் எழுப்புதல் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 22 ராவத், கோடாசாஹன், ஹசன்பஜார் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில் 198 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஜக்ஹரா மற்றும் டும்ரியா இப்பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் பின் தொடர் ஊழியர்களின் மூலமாக 40க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களை சந்தித்து அவர்களை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்தவும் மற்றும் நிலைத்திருக்கச் செய்யவும் கர்த்தர் உதவி செய்தார். விசுவாசிகள் மத்தியில் ஜெப தாகம் பெருகவும், பணித்தளங்களில் சிறுவர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 23 சகௌலி, பெத்தியா, ரிவீல்கஞ்ச் மற்றும் வால்மீகி நகர் பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 27 பேர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெற்று வரும் புழழன நேறள ஊடரடி (புேஊ) ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர்  சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துரைக்கவும் மற்றும் வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும் கர்த்தர் உதவி செய்தார்.ஆகஸ்ட் 2 அன்று பிபாரியா கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் கூடுகையில், 40 பெரியவர்களும் கலந்துகொண்டு தேவ வசனத்தைக் கேட்டனர். 

செப்டம்பர் 24 பபிஷ்னுபுரா கிராமத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். மேலும், மோத்திஹாரி, படுக்காவ் போக்ரா டோலா ஆகிய பணித்தளங்களில் 12 புதிய குடும்பத்தினருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ராம்நகர் டும்ரியா கிராமத்தில் விசுவாசியின் வீட்டில் நடைபெற்ற கூடுகையில், 15 பேர் புதிதாக் கலந்துகொண்டு சுவிசேஷத்தைக் கேட்டனர். சிங்கர்வாஹா, டான், கோபர்ஹியா, ஜாமுவா தோலா ஆகிய கிராமங்களில் கைப்பிரதிகள் மற்றும் தனிநபர் ஊழியங்களின் மூலமாக நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும்,  பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 25 சாண்டி மற்றும் ரிவீல்கஞ்ச் பணித்தளங்களில் நடைபெற்று வரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும், விரைவில் கட்டி முடிக்கப்பட்டு ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும், விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவும் ஜெபிப்போம்.

August 2025

                                               வடமேற்கு மண்டலம்


ஆகஸ்ட் 22 யோகப்பட்டி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கானக் கூடுகையில் 70 வாலிபர்கள் பங்கேற்றனர்;. இக்கூடுகையில், சகோதரர் மணிலால் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, நிமோஹியா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 69 பேரும், ஹர்நாடண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டங்களில் 100 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களிலுள்ள வாலிப சகோதர சகோதரிகள் சந்திக்கப்படவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 23 ஷாபூர், சண்டேஸ் மற்றும் பாரா ஆகிய பணித்தளத்தில் நடைபெற்ற ஒரு நாள் உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில் 100-க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இப்பணித்தளங்களில் ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், ஊழியத்திற்கு உண்டாகும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 24 கடந்த நாட்களில், பாவ்னா, பீரோ, சண்டேஸ், ஷாபூர், பஹாகா, பைரோகஞ்ச் மற்றும் ராம்நகர் ஆகிய பணித்தளங்களில், 186 பேர் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தங்கள் விசுவாசத்தினை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் மற்றும் இவர்களது குடும்பங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 25 சிக்தோர், பர்கான், ஹர்புர்வா, பெல்வானியா, பேசுமான்பூர், தோக்ரா, மகாடி, டும்ரியா, பீரோகஞ்ச், பஹாகா மற்றும் மோத்திஹாரி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் வாயிலாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். இவர்கள் சிறு வயதிலேயே இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், இவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் மற்றும் இவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 26 சவுராஹா, பிபரியா, சிர்சியா, ஹர்நாடண்ட் மற்றும் சங்ரன்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்தி கூட்டங்களையும், வீட்டுக் கூடுகைகளையும் மற்றும் சுவிசேஷ ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். நவ்டான், போரியா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கான ஏற்ற நிலங்கள் கிடைக்கவும் மற்றும் சாண்டி, ரிவீல்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.


July 2025

                                வடமேற்கு மண்டலம்


ஜுலை 22 ஜுன் 5 அன்று, ஹர்னடன்ட் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான  ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 80-க்கும் மேற்பட்ட சகோதரிகள் பங்கேற்றனர்; சகோதரி எல்ஸிபா தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், தனிப்பட்ட முறையில் பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் தேவன் உதவிசெய்தார். வடமேற்கு மண்டலத்தின் பணித்தளங்களில் பெண்களிடையே செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஜுலை 23 ஜுன் 13 அன்று பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒருநாள் கூடுகையில் 80 வாலிபர் பங்கேற்றனர்; இக்கூடுகையில் சகோ. பிரதுமன் மற்றும் சகோ. ரூபன் ஆகியோர் வாலிபருக்கேற்ற செய்தியை வேத வசனங்களின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டனர். ஜெப வேளையின்போது வாலிபரில் பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். இப்பணித்தள வாலிபர்கள் பரமனைக் கண்டுகொள்ள ஜெபிப்போம். 

ஜுலை 24 பெத்தியா, பஹாகா, ராம்நகர் மற்றும் ஜோகபட்டி ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 25 பேர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 50 கிராமங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் வாயிலாக ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், கிராமங்களில் சுற்றித் திரியும் சிறுவர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் மற்றும் அவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.  

ஜுலை 25 பீரோ பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில் சகோ. வீரேந்திர குமார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்காகவும் மற்றும் கைப்பிரதி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜுலை 26 கோரஷான் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் கூடுகையின் மூலமாக விசுவாசிகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும், ஜுன் 15 அன்று, சகோதரிகளுக்கான சீஷத்துவ பயிற்சியினை நிறைவுசெய்த 8-வது அணியினருக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியினை நடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார். பயிற்சிபெற்றோர் மூலமாக பணித்தளங்களில் வரும் நாட்களில் ஆத்தும அறுவடை பெருக ஜெபிப்போம். 


June 2025

                                          வடமேற்கு மண்டலம்

🔆 மே 16 அன்று ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒரு நாள் கன்வென்ஷன் கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது; சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் சாமுவேல் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.

🔆  தொடர்ந்து,  மே  17 அன்று பெத்தியா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒரு நாள் சிறப்பு கூட்டத்தில் 100 வாலிப சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திலும் சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் சாமுவேல் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டு, வாலிபர்களின் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளையும் வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தார். ஜெப வேளையின்போது பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். பங்கேற்ற ஒவ்வொரு வாலிப சகோதர சகோதரிகளுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. 

🔆  ரிவீல்கஞ்ச், கயாம்நகர், பட்டௌலி, ரத்நாத் மற்றும் பாவன் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகைகளிலும் மற்றும் சாரியா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளிலும் நூற்றுக்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத ஜனங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் இணைந்து ஜெபித்தனர்.

🔆   எக்மா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். போதகர் ரபீந்த்ரா இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கும், குறிப்பாகப் பெற்றோருக்கும் இக்கூடுகை பிரயோஜனமாயமைந்தது. 

🔆     சிவான், கதானி, பெத்தியா, சன்பாட்டியா, பைரோகஞ்ச் மற்றும் ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட 42 பேர், கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கு மகிமை! 

🔆    ஞாயிறுப் பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான நற்செய்திக் குழு ஊழியர்களின் வாயிலாக பணித்தளங்களில் உள்ள சிறுவர் சிறுமியருக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் வேத வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும் கர்த்தர் உதவிசெய்தார்.  இவ்வூழியங்களின் மூலம், தியோரியா, பைரியா, நவ்டான், ஜெக்தீஷ்பூர், கோரஷான் மற்றும் பகாஹா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் சிறுவர் சிறுமியர் சந்திக்கப்பட்டனர்.

🔆     மே 8 அன்று பாலிக்கான் பணித்தளத்திலும்  மற்றும் குனல் பணித்தளத்திலும் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, மே 14 அன்று சிவான் மாவட்டத்தின் தண்ட்வா பணித்தளத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட சுவிசேஷக் கூட்டத்திலும் பணித்தள மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்தனர். கூட்டத்தைத் தொடர்ந்து, வீடுகளைச் சந்தித்து ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். 

🔆    ஸ்ரீ;ரீநகர்  பணித்தளத்தில்  கட்டப்பட்ட ஊழியர் இல்லம் மே 11 அன்று கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சகோ. ராகேஷ் ஜெபத்துடன் ஊழியர் இல்லத்தைத் திறந்துவைத்தார். பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

🔆           பைரோகஞ்ச் பணித்தளத்தில் தொலைதூர மருத்துவ மையத்தின் வாயிலாக 200 பேருக்கு மருத்துவ உதவியுடன் கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார்.

🔆       நவ்டான்  மற்றும்   போரியா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலங்கள் விரைவில் வாங்கப்படவும், சாண்டி மற்றும் ரிவீல்கஞ்ச் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திக் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.


MAY 2025

                                  வடமேற்கு மண்டலம்



ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தினங்கள் ராம்நகர் மற்றும் பகாஹா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களில் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 750-க்கும் அதிகமான விசுவாசிகள் பங்கேற்றனர். அத்துடன், ஏப்ரல் 6 மற்றும் 8 ஆகிய தினங்கள் பெத்தியா மற்றும் வால்மீகிநகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூட்டங்களில் 550-க்கும் அதிகமானோரும், தொடர்ந்து, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் சப்ரா பணித்தளத்தில் நடைபெற்ற கூட்டங்களில் 350 பேரும், பெத்தியா பணித்தளத்தில் ஏப்ரல் 7 அன்று நடைபெற்ற குடும்பக் கூடுகையில் மண்டல ஊழியர்கள், வேதாகமப் புருஷர்கள் மற்றும் பெண்கள், விசுவாசிகள் 130 பேரும்; பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோ. ஃபிரடி ஜோசப் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 

பெத்தியா, பகாஹா, மஹராஜ்கஞ்ச் மற்றும் ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராகத் தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட 50 பேர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!   

பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர்; சகோதரி எல்சிபா கர்த்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். குடும்பத்தையும், உறவினரையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ............பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். 

ஏப்ரல் 9,10,11 ஆகிய தினங்கள் படௌலி கிராமத்திலும், ஏப்ரல் 16 அன்று ராமசங்கர் கிராமத்திலும், ஷபாபூர் பகுதியில் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான நாட்களிலும் நடைபெற்ற உபவாசக்கூடுகைகள் ஆசீர்வாதமாக அமைந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சியடையவேண்டும் என்ற தாகத்துடன், தேசத்தையும் ஆதாயப்படுத்தவேண்டும் என்ற பாரத்தோடு இணைந்து ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

பணித்தளங்களில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளுக்காகவும், நவ்டான் மற்றும் போரையா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கு ஏற்ற இடங்கள் கிடைக்கவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், மோத்திஹாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பயிற்சிமையம் மற்றும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

April 2025

  வடமேற்கு மண்டலம்



 • பெத்தியா பணித்தள ஆலயத்தில், மார்ச் 1 அன்று நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில் 350 பேர் பங்கேற்றனர்; Rev. டேனியல் இன்பராஜ் (மிஸ்பா ஊழியங்கள்) கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார்.
• பகாஹா, ரக்சால் மற்றும் ஜெக்தீஷ்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களில் 120 பேர் கலந்துகொண்டனர். இக்கூட்டங்களில், சகோதரி எல்ஷிபா மற்றும் சகோதரி சாரதா ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர்.
• பெத்தியா, தியோரியா, பைரியா, மஜுலியா, மௌபலா, பவானா மற்றும் பீரோ ஆகிய பணித்தளங்களில், 92 பேர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையின் மூலமாக தேவனை மகிமைப்படுத்தினர்.
• பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஞாயிறுப் பள்ளிகளில் சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்றனர். மார்ச் 2 அன்று ஸ்ரீநகர் பணித்தளத்தில் சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட ஒருநாள் முகாமில், 25 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர்.
• மார்ச் 9 அன்று ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற திறந்தவெளி நற்செய்திக் கூட்டத்தில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து, மார்ச் 18 அன்று பதரியா, புர்விடோலா கிராமத்தில் உள்ளோருக்கு முதன்முறையாக நற்செய்தியை அறிவிக்கவும்  கர்த்தர் உதவிசெய்தார்.
• ஹஸன் பஜார், மௌபலா, பவானா மற்றும் பீரோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று, தேசத்திற்காகவும் மற்றும் ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். அத்துடன், மார்ச் 9 முதல் 11 வரை சன்தேஸ் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஜெபக் கூடுகையினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூடுகையில் 130 விசுவாசிகள் பங்கேற்றனர்.
• நவ்டன் மற்றும் போரியா ஆகிய பணித்தளங்களில் ஆலயத்திற்கான நிலங்கள் கிடைக்கவும், ஹர்னதாண்ட், ரிவீல்கஞ்ச் மற்றும் சாண்டி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், மோதிஹாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி மையம் மற்றும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும்
ஜெபிப்போம்.