July 2026

 



ஜூலை 22 ஸ்ரீநகர் மற்றும் டும்ரா பணித்தளங்களில் ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களில் 120 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். சகோ. குரு மஹிமா, சகோ. அபிஷேக் குமார் மற்றும் சகோ. சந்தோஷ் ஆகியோர் 'முயற்சியைக் கைவிடாதீர்கள்" என்ற கருப்பொருளைக் மையமாகக் கொண்டு கிறிஸ்துவின் அன்பைப் போதித்தனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்களது பெற்றோர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜூலை 23 ஜூன் 3 அன்று பெத்தியா பணித்தளத்தில் 'முயற்சியைக் கைவிடாதீர்கள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற விடுமுறை வேதாகமப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கூட்டத்தில் சுமார் 70 சகோதர சகோதரிகள் பங்குபெற்றனர். பயிற்சியின் நிறைவில், பயிற்சியாளர்கள் தங்கள் கிராமங்களில் கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றுவோம் எனத் தீர்மானித்து கடந்து சென்றனர். பணித்தள விசுவாசிகள் மத்தியில் சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவண்டை நடத்தும் தாகம் பெருக ஜெபிப்போம்.

 ஜூலை 24 ஜூன் 5 அன்று ரிவைல்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 25 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். கர்த்தரை துதிக்கும் பாடல்கள், மற்றும் 'நீதியின் இராஜ்ஜியத்தை தேடுங்கள்" என்ற தலைப்பின் கீழ் தேவ வார்த்தைகள் பகிரப்பட்டு, தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ள வாலிபர்கள் வழிநடத்தப்பட்டனர்.  இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழவும், பணித்தளங்களில் புதிதாக கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டுள்ள ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 25 ஜூன் 2 அன்று ராம்நகர் பணித்தளத்தின் முஞ்ரா கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களில், சுமார் 65 பேர் பங்கேற்றனர். மேலும், ஜூன் 20 அன்று ராம்நகர் பணித்தளத்தின் சிகாரி கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட நபர்கள் நற்செய்தியினைக் கேட்டு தேவ சமாதானத்தையும் மற்றும் தேவ அன்பையும் அறிந்துக்கொண்டனர். இதில் பங்குபெற்ற ஒரு குடும்பத்தினர் தேவ அன்பினால் தொடப்பட்டு, தேவனை ஏற்றுக் கொள்ள தங்களை ஒப்புக்கொடுத்தனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்காகவும், தனிநபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜூலை 26 ஸ்ரீநகர் பணித்தளத்தில் சுற்றுசுவர் இல்லாதக் காரணத்தால், சபை கூடுகைக்கு விரோதமாக எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தி சபை ஆராதனையில் இடையூறு விளைவிக்கின்றனர். இப்பணித்தள விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும். விரைவில் இப்பணித்தள ஆலயத்தைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்படவும் ஜெபிப்போம். 


June 2026

 


ஜூன் 21 நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற “Good News Club” சிறுவர் ஊழியர்களின் மூலமாக 45 சிறுவர் சிறுமியருக்கும் மற்றும் மோத்திஹாரி பணித்தளத்தின் பைதரோலியா 50 சிறுவர் சிறுமியருக்கும், பக்ரி தயால் பணித்தளத்தில் 24 சிறுவர் சிறுமியருக்கும்,மஜ்ஹௌலியா பணித்தளத்தில் 40 சிறுவர் சிறுமியருக்கும் மற்றும்  ஹர்னாடாட், பஸ்வாரியா, கர்காட்டி, சிற்சா மலைஹி டோலா, ராம்நகர் பணித்தளங்களில் 220 சிறுவர் சிறுமி இருக்கும் பாடல்கள் மட்டும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.  இச்சிறுவர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டுள்ள வேத வசனங்கள் வரும் நாட்களில் நல்ல பலனைத் தர ஜெபிப்போம். 

ஜூன் 22 சஹார் பணித்தளத்தில் நடைபெற்ற வீட்டு ஜெபத்தில் 25 பேர் பங்கேற்றனர். சரையா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 20 விசுவாசிகள் பங்கேற்றனர். சப்ரா பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் 300 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, மோத்திஹாரி, மாதேபூர் பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற விடுதலைக் கூட்டத்தில் 70 பேர் பங்கேற்றனர். மேலும், மட்டியாரியா ஜீத்பூர், ஜோகாபட்டி மற்றும் சிவான் பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். நற்செய்தி அறிவிக்கப்பட்ட கிராமங்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ள ஜெபிப்போம். 


ஜூன் 23 ஜோகார்பட்டி பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் கணவன் மனைவியாக 50 தம்பதியர் பங்கேற்றனர். குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழவும், குடும்பத்தினர் மத்தியில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும், பல்வேறு ஆலோசனைகளுடன் வசனத்தின் அடிப்படையிலான தேவ செய்தியும் வழங்கப்பட்டது. பைரோகஞ்ச் பணித்தளத்தில் ஆராதனைக்கு எதிராக நிலவிவரும் எதிர்ப்புகள் நீங்கவும், ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும், மஜ்ஹௌலியா பணித்தொட ஊழியர் இல்ல கட்டுமான பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.


ஜூன் 24 மே 19 அன்று, ஜோகாபட்டி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 50 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஹர்னாடாண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கோடுகளில் 80 வாலிபர் பங்கேற்றனர். இக்கூட்டங்களில் சகோதரர் பழனிவேலு வாலிபரின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளுடன், வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற செய்தியையும் வசனத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டார். ஜெப வேளையின்போது, பல வாலிபர்கள் கிறிஸ்துவுக்கென்று தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். பணித்தளங்களில் செய்யப்பட்டு வரும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், வாலிபர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.


ஜூன் 25 மஜ்ஹௌலியா, ஜோகாபட்டி, சரையா மற்றும் கட்ஹனி பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 23 பேர், கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலம் வெளிப்படுத்தினார்; தேவனுக்கே மகிமை! மோத்திஹாரி பணித்தளத்தில் நடைபெற்று வரும் ஊழியர் இல்லம் மற்றும் பணித்தள அலுவலகக் கட்டுமான பணிகளில் தடையின்றி நடைபெறவும், ஏக்மா பணித்தள ஆலயத்திற்கு ஏற்ற நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம்.



May 2026



மே 21 கோடாசன், பால்வாலியா, புஹனர், சிர்சா, கஸ்துர்பா, மோத்திஹாரி மற்றும் ராம் நகர் ஆகிய பணித்தளங்களில், நற்செய்திக் குழு ஊழிங்கள், ஞாயிறுப் பள்ளி ஊழியங்கள் மற்றும் பின் தொடர் ஊழியங்களின் மூலமாக, 557 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பில் வளரவும், இவர்களது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.  

மே 22 பெல்பனியா மற்றும் சிவான் பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூட்டங்களில், 50 பேர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். பகாஹா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 70 விசுவாசிகளும், நிமோயியா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 17 பேரும் கலந்துகொண்டனர். பணித்தங்களில் செய்யப்பட்டுவரும் தொடர் நற்செய்திப் பணிகள் நல்ல பலனைத் தர ஜெபிப்போம்.  

மே 23 பெத்தியா பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 60 பேரும், ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 75 விசுவாசிகளின் குடும்பங்களும் மற்றும் வால்மீகிநகர் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 50 பேரும் பங்கேற்றனர். தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவை முன்னிறுத்தும் குடும்ப வாழ்க்கை வாழவும் போதனையுடன் ஆலோசனையையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்கள் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும், உறவினர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

மே 24 யோகாபட்டி, பெல்வானியா, ஸ்ரீநகர், சப்ரா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில், விசுவாசிகள் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்தின் இரட்சிப்பிற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஏப்ரல் 4 அன்று ஹர்னடண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 20 வாலிபர் பங்கேற்றனர். பைரவ்கஞ்ச் பணித்தள ஆலயப் பிரச்சனைகள் மாற ஜெபிப்போம்.

மே 25 கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 34 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்க, மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருக்க ஜெபிப்போம்.

April 2026

 


ஏப்ரல் 21'ராம்நகர், பகாஹா, பைரோகஞ்ச், ரக்சௌல் மற்றும் சன்சௌரா பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஊழியங்கள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக, சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்தவும், வேத வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும், ஒழுக்க நெறிகளைப் போதிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், சிறுவர்களில் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 22 'சப்ரா, பிஹியா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில் 100 விசுவாசிகளும், சரையா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 45 விசுவாசிகளும் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஷாபூர் மற்றும் பெத்தியா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் 220 பேர் பங்கேற்று கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர். தொடர்ந்து, பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற வீட்டுக் கூட்டத்தில் 30 பேரும், மோத்திஹாரி ருலாஹி சபையில் நடைபெற்ற இரவு கூட்டத்தில் 50 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களில் வீட்டுக் கூடுகைகள் அதிகம் தொடங்கப்படவும், வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருக்கும் உபவாச மற்றும் சிறப்புக் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 23 'பைரோகஞ்ச் பணித்தளத்தில் மார்ச் 5 அன்று நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 30 குடும்பத்தினர் பங்கேற்றனர். தேவ செய்தியுடன், குடும்ப வாழ்விற்கான ஆலோசனைகளையும் கூடவே அளித்து, அவர்களை ஜெபத்தில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள ஊழியர்களின் பயண பாதுகாப்பிற்காகவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 24 'மார்ச் 8 மற்றும் 17 ஆகிய தினங்கள் சன்பட்டியா, பகாஹா மற்றும் நாராயன்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 155 பெண்கள் பங்கேற்றனர். மேலும், ராம்நகர் மற்றும் பகாஹா பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர்களுக்கான கூடுகையில் 135 வாலிபர்கள் கலந்துகொண்டனர். ருலாஹி பணித்தளத்தில் ஊழியர் இல்லப் பணிகளை மீண்டும் தொடங்க கர்த்தர்  உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெறும் வாலிபர் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், வாலிபர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 25 'பணித்தளங்களில் புதிதாக கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 109 பேர், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஆராதனைக்கு புதிதாக வந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்காகவும், பணித்தளங்களில் ஊழியங்களுக்கு திறந்த வாசல்கள் உண்டாகவும் ஜெபிப்போம்.

March 2026

 



மார்ச் 22 : மோத்திஹாரி மாவட்டம் ஜாக்ரா கிராமத்தில் 35 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள், கதைகள் மற்றும் வேதாகம வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், ராம்நகர், பகாஹா மற்றும் பைரோகஞ்ச் பணித்தளங்களில் ஞாயிறுப் பள்ளிகள் மூலமாக சிறுவர்களைச் சந்திக்கவும், பிப்ரவரி 4 அன்று மோத்திஹாரி பணித்தளத்தில் 110 சிறுவர் சிறுமியர் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். வால்மீகிநகர் பணித்தளத்தில் புதிதாக டியூசன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 23 : ராம்நகர் பட்காவ் பகுதியில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்று நற்செய்தியைக் கேட்டனர். வால்மீகிநகர் நௌரங்கியா கிராமத்தில் நடைபெற்ற இரவு ஜெபக்கூடுகையின்போது, அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்டிருந்த சகோதரியை கர்த்தர் விடுதலையாக்கினார். ரக்சௌல் பகுதிகளில் குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் சுவிசேஷத்தையும் கூடவே பகிர்ந்துகொள்ள கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சுவிசேஷ ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

மார்ச் 24 : பிப்ரவரி 6 அன்று சுகௌலி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில், 12 வாலிப சகோதரர்கள் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் வாலிபர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், போதை வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபரை கர்த்தர் விடுதலையாக்கவும், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

மார்ச் 25 :ராம்நகர், யோகாபட்டி, ஆரா மற்றும் நர்கட்டியாகஞ்ச் பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 32 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், மற்றவர்களுக்கு சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம். 

மார்ச் 26 : சப்ரா ஜெம்ஸ் செயல் மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 விசுவாசிகளும், பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 பேரும் பங்கேற்றனர். பாட்டினியா கிராமத்தில் புதிய வீட்டு சபையினைத் தொடங்க கர்த்தர் வழிதிறந்தார். தொடர்ந்து, ஹசன்பஜார் பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக் கூடுகையில் 85 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் ஜெப வாழ்க்கையில் பெலப்படவும், புதிதாக ஆத்துமாக்கள் மந்தையில் சேரவும் ஜெபிப்போம். 

Feb 2026

 


பிப்ரவரி 20
 
ஜனவரி 16 அன்று நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டம் ஆசீர்வாதமாயிருந்தது; பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், டூமரி கோலாகாட் கிராம அரசுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூலமாக 250 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்களின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். பள்ளிகளில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் தனி நபர் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 21 ஜனவரி 15 அன்று பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான கூடுகையில் 86 வாலிப சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். ஜெப வேளையில் பலர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டதுடன், கிறிஸ்துவுக்காகவும் வாழ தங்களை அர்ப்பணித்தனர். பெத்தியா பணித்தளத்தில் ஜெம்ஸ் பள்ளி தொடங்கப்பட எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக மற்றும் தடைகள் நீங்க ஜெபிப்போம்.

பிப்ரவரி 22 பெத்தியா, முஸஹரி தோலி, மச்சர்காவான், பரத்பட்டி, ஹசன் பஜார், சக்வத், சஹேஜ்னி, லௌகரியா, பைரியா மற்றும் ஜகதீஷ்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 863 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவித்து மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும், அமேத்தியா கிராமத்தில் 120 பேருக்கு கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாக நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளச் சிறுவர்கள் கிறிஸ்துவினால் தொடப்படவும், அவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.  

பிப்ரவரி 23 ஜனவரி 11 அன்று ராம்நகர் பணித்தளத்தில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 4 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பைரோகஞ்ச் பணித்தளத்தில் ஊழியத்திற்கு விரோதமாக எழும்புவோரை கர்த்தர் சந்திக்கவும், மிகுந்த எதிர்ப்புகளைச் சந்திந்துவரும் தேவரியா பணித்தள ஊழியர்களை கர்த்தர் பாதுகாக்கவும், சன்பட்டியா, நௌதன், நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம். 

Jan 2026

 


ஜனவரி -  22
டிசம்பர் 5, 2025 அன்று கோட்வா கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியத்தில் 65 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும், மச்சாஹா, பேதியா, பேரியா தட்வா நந்த்பூர், டோலா சுகௌலி, பிப்ரா, மந்திர் பாளி போன்ற பணித்தளங்களிலும் மற்றும் சனபட்டியா அரசு பள்ளியிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களில் வேதாகமச் சம்பவங்கள், வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை சிறுவர் சிறுமியருக்கு அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஊழியங்களின் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவண்டை சேர்க்கப்படவும், பாவத்திலும் மற்றும் பிசாசின் கட்டிலும் அகப்பட்டிருக்கும் ஜனங்கள் விடுதலையடையவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  23  நர்கட்டியகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 30 பெண்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோதரி எலிசாபா பெங்க்ரா கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கம் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளத்தில் பெண்கள் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலமாக சமுதாயத்தில் மற்றும் குடும்பங்களில் தேவன் மாற்றத்தைக் உண்டாக்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  24  டிசம்பர் 17, 2025 அன்று, சப்ரா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில், 130 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பழனிவேலு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபரின் வாழ்க்கைக் கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் கூடவே அளித்து அவர்களுக்காக ஜெபித்தார். ஜெபவேளையின்போது, 60 வாலிபர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர் கிறிஸ்துவில் நிலைத்து நிற்கவும் மற்றும் கிறிஸ்துவை அறியாத பணித்தள வாலிபரை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 25 2025 டிசம்பர் மாதத்தில், பணித்தளங்களிலும் மற்றும் பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற்ற பல்வேறு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் மூலமாக சிறியோர், வாலிபர் மற்றும் பெரியோருக்கு கிறிஸ்து பிறப்பின் காரணத்தையும், கூடவே நற்செய்தியையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். சன்பட்டியா, நோதன் மற்றும் நர்கட்டியகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்பட ஜெபிப்போம். 

ஜனவரி -  26  பேதியா மற்றும் நிமோஹியா பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 16 பேர் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பஹாகா பணித்தளத்தில் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வருடமாகத் தடைபட்டிருந்த ஆராதனையினை மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு எதிராயிருப்போரை கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.