March 2026

 



மார்ச் 22 : மோத்திஹாரி மாவட்டம் ஜாக்ரா கிராமத்தில் 35 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள், கதைகள் மற்றும் வேதாகம வசனங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், ராம்நகர், பகாஹா மற்றும் பைரோகஞ்ச் பணித்தளங்களில் ஞாயிறுப் பள்ளிகள் மூலமாக சிறுவர்களைச் சந்திக்கவும், பிப்ரவரி 4 அன்று மோத்திஹாரி பணித்தளத்தில் 110 சிறுவர் சிறுமியர் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். வால்மீகிநகர் பணித்தளத்தில் புதிதாக டியூசன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 23 : ராம்நகர் பட்காவ் பகுதியில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்று நற்செய்தியைக் கேட்டனர். வால்மீகிநகர் நௌரங்கியா கிராமத்தில் நடைபெற்ற இரவு ஜெபக்கூடுகையின்போது, அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்டிருந்த சகோதரியை கர்த்தர் விடுதலையாக்கினார். ரக்சௌல் பகுதிகளில் குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் சுவிசேஷத்தையும் கூடவே பகிர்ந்துகொள்ள கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சுவிசேஷ ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

மார்ச் 24 : பிப்ரவரி 6 அன்று சுகௌலி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில், 12 வாலிப சகோதரர்கள் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் வாலிபர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், போதை வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபரை கர்த்தர் விடுதலையாக்கவும், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

மார்ச் 25 :ராம்நகர், யோகாபட்டி, ஆரா மற்றும் நர்கட்டியாகஞ்ச் பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 32 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், மற்றவர்களுக்கு சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம். 

மார்ச் 26 : சப்ரா ஜெம்ஸ் செயல் மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 விசுவாசிகளும், பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 பேரும் பங்கேற்றனர். பாட்டினியா கிராமத்தில் புதிய வீட்டு சபையினைத் தொடங்க கர்த்தர் வழிதிறந்தார். தொடர்ந்து, ஹசன்பஜார் பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக் கூடுகையில் 85 பேர் கலந்துகொண்டனர். விசுவாசிகள் ஜெப வாழ்க்கையில் பெலப்படவும், புதிதாக ஆத்துமாக்கள் மந்தையில் சேரவும் ஜெபிப்போம். 

Feb 2026

 


பிப்ரவரி 20
 
ஜனவரி 16 அன்று நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டம் ஆசீர்வாதமாயிருந்தது; பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், டூமரி கோலாகாட் கிராம அரசுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூலமாக 250 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்களின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். பள்ளிகளில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் தனி நபர் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 21 ஜனவரி 15 அன்று பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான கூடுகையில் 86 வாலிப சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். ஜெப வேளையில் பலர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டதுடன், கிறிஸ்துவுக்காகவும் வாழ தங்களை அர்ப்பணித்தனர். பெத்தியா பணித்தளத்தில் ஜெம்ஸ் பள்ளி தொடங்கப்பட எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக மற்றும் தடைகள் நீங்க ஜெபிப்போம்.

பிப்ரவரி 22 பெத்தியா, முஸஹரி தோலி, மச்சர்காவான், பரத்பட்டி, ஹசன் பஜார், சக்வத், சஹேஜ்னி, லௌகரியா, பைரியா மற்றும் ஜகதீஷ்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 863 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவித்து மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும், அமேத்தியா கிராமத்தில் 120 பேருக்கு கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாக நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளச் சிறுவர்கள் கிறிஸ்துவினால் தொடப்படவும், அவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.  

பிப்ரவரி 23 ஜனவரி 11 அன்று ராம்நகர் பணித்தளத்தில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 4 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பைரோகஞ்ச் பணித்தளத்தில் ஊழியத்திற்கு விரோதமாக எழும்புவோரை கர்த்தர் சந்திக்கவும், மிகுந்த எதிர்ப்புகளைச் சந்திந்துவரும் தேவரியா பணித்தள ஊழியர்களை கர்த்தர் பாதுகாக்கவும், சன்பட்டியா, நௌதன், நர்கட்டியாகஞ்ச் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும் ஜெபிப்போம். 

Jan 2026

 


ஜனவரி -  22
டிசம்பர் 5, 2025 அன்று கோட்வா கிராமத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியத்தில் 65 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும், மச்சாஹா, பேதியா, பேரியா தட்வா நந்த்பூர், டோலா சுகௌலி, பிப்ரா, மந்திர் பாளி போன்ற பணித்தளங்களிலும் மற்றும் சனபட்டியா அரசு பள்ளியிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களில் வேதாகமச் சம்பவங்கள், வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை சிறுவர் சிறுமியருக்கு அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஊழியங்களின் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவண்டை சேர்க்கப்படவும், பாவத்திலும் மற்றும் பிசாசின் கட்டிலும் அகப்பட்டிருக்கும் ஜனங்கள் விடுதலையடையவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  23  நர்கட்டியகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 30 பெண்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோதரி எலிசாபா பெங்க்ரா கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கம் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளத்தில் பெண்கள் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலமாக சமுதாயத்தில் மற்றும் குடும்பங்களில் தேவன் மாற்றத்தைக் உண்டாக்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  24  டிசம்பர் 17, 2025 அன்று, சப்ரா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில், 130 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பழனிவேலு கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபரின் வாழ்க்கைக் கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் கூடவே அளித்து அவர்களுக்காக ஜெபித்தார். ஜெபவேளையின்போது, 60 வாலிபர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர் கிறிஸ்துவில் நிலைத்து நிற்கவும் மற்றும் கிறிஸ்துவை அறியாத பணித்தள வாலிபரை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 25 2025 டிசம்பர் மாதத்தில், பணித்தளங்களிலும் மற்றும் பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற்ற பல்வேறு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் மூலமாக சிறியோர், வாலிபர் மற்றும் பெரியோருக்கு கிறிஸ்து பிறப்பின் காரணத்தையும், கூடவே நற்செய்தியையும் அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். சன்பட்டியா, நோதன் மற்றும் நர்கட்டியகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்பட ஜெபிப்போம். 

ஜனவரி -  26  பேதியா மற்றும் நிமோஹியா பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 16 பேர் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பஹாகா பணித்தளத்தில் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வருடமாகத் தடைபட்டிருந்த ஆராதனையினை மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் ஊழியத்திற்கு எதிராயிருப்போரை கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம். 


December 2025

 வடமேற்கு மண்டலம்


டிசம்பர் 22 ஜம்ஷில்பூர், ராம்நகர், ஜங்கல்பூர், ஜம்ஷிலியா, சிலோகு மற்றும் கோஷம்குஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் மற்றும் ஞாயிறுப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 257 சிறுவர் சிறுமியருக்கு வேதாகம வசனங்கள் மற்றும் கதைகள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் மற்றும் அவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 23 பெத்ரியா பணித்தளத்தில் நவம்பர் 8 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 50 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். வாலிப வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளுடன், வேத வசனங்கள் மூலமாகவும் வாலிபரை கிறிஸ்துவண்டை வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும், சமுதாயத்தில் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் மாதிரிகளாக மாறவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 24 சடிகா மற்றும் குனிமாட் கிராமங்களில் நடைபெற்ற சுவிசேஷ மற்றும் தனிநபர் ஊழியங்களின் வாயிலாக சுமார் 50 பேருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. லாஹீ, மொஹ்ரிகரி பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 5 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

டிசம்பர் 25 பிலோம் லுன்செக், பிலோம் ஜம்ஷிலியா, நிஜக் மற்றும் மிர்ஜாகட் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில், பணித்தள விசுவாசிகள் 446 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். நஸ்ரு ஜம்ஷிலியா பணித்தளத்தில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்போர் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 26 ரிவில்காட் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், சகானி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.  


November 2025

 வடமேற்கு மண்டலம்



நவம்பர் 21 பகாஹா பணித்தளத்தில் 'எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாதே" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கூடுகையில் 30 பேரும், தொடர்ந்து சப்ராவில் நடைபெற்ற கூடுகையில் 9 பேரும் பங்கேற்றனர். பகாஹா பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் அங்கு செயல்பட்டுவரும் தையற்பயிற்சி மையக் கட்டிடப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 22 பணித்தளங்களில் ஒவ்வொரு ஞாயிறும் நடைபெற்றுவரும் ஞாயிறுப் பள்ளிகளில், பகாஹா பணித்தளத்தில் 48 பிள்ளைகளும், ராம்நகர் பணித்தளத்தில் 25 பிள்ளைகளும் கலந்துகொள்ளுகின்றனர். சக்வத் டிஹியா ஜெம்ஸ் பகற் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் 70 குழந்தைகள் கலந்துகொண்டனர். சிறுவர்கள் தவறான வழிகளில் சிக்கிக்கொள்ளாமலிருக்கவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 23 பெத்தியா பணித்தளத்தில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 300 சகோதரிகள் கலந்துகொண்டனர். 'நீ ஆயத்தமாகு; மற்றவர்களையும் ஆயத்தப்படுத்து" என்ற தலைப்பின் கீழ் செய்திகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தினங்கள் பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில் 250 சகோதரிகள் பங்கேற்றனர். கூடுகைகளில் பங்கேற்ற பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்துவை அவர்கள் வெளிப்படுத்தவும் மற்றும் சமுதாயத்தில் சாட்சியாக வாழவும் ஜெபிப்போம். 

நவம்பர் 24 பைரோகஞ்ச், வால்மீகிநகர், ராம்நகர், பகாஹா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும், ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். கோபால்கஞ்ச், வால்மீகிநகர் மற்றும் ரக்சௌல் ஆகிய பணித்தளங்களுக்கு ஏற்ற ஊழியர்களை கர்த்தர் தரவும், இங்கு நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 25 கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 53 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! மஜௌலியா பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லக் கட்டிடப் பணிகள் விரைவில் நிறைவுபெற ஜெபிப்போம்.

October 2025

                                                 வடமேற்கு மண்டலம்



அக்டோபர் : 22 ராம்நகர் மற்றும் கோடாசஹன் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இளைஞர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில் 115 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்று, தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். ராம்நகர், பைரியா, கோடாசஹன் மற்றும் பைரோகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஞாயிறுப் பள்ளிகளில் சுமார் 160 சிறுவர் சிறுமியர் பங்கேற்றுவருகின்றனர். பக்ஹா பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவர் பின்தொடர் ஊழியத்தின் மூலமாக 55 சிறுவர் சிறுமியரைச் சந்தித்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தள விசுவாசிகள் கிறிஸ்துவில் நிலைத்து நிற்கவும், சிறுவர் சிறுமியர் வாயிலாக அவர்கள் குடும்பங்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 23 ஜகதீஷ்பூர், பைரியா, ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டங்களில் சுமார் 300 பேர் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசம் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். பக்ஹா, பைரோகஞ்ச், ராம்நகர், பேரஹனி, சியூட்டஹா மற்றும் நர்கட்டியாகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் கடந்த மாதம் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக, சுமார் 700 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 18 பேர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

அக்டோபர் : 24 நைத்தன், மஜௌலியா, பக்ஹா, சுகௌலி, யோகாபட்டி, ஹசன்பஜார் மற்றும் சபாபூர்  ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களில் சுமார் 600 பேர் பங்கேற்றனர். பெண்கள் மூலமாக பணித்தள கிராமங்களில் கிறிஸ்துவின் சாட்சி பரவவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில், ஆலயத்திற்கான நிலங்கள் வாங்கப்படவும், விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 25 பேரஹ்னி பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்றனர்; 5 குடும்பத்தினர் புதிதாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, செப்டம்பர் 5 அன்று பைரோகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 50 குடும்பத்தினரும், செப்டம்பர் 8 அன்று சன்பட்டியா மற்றும் சாத்தி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 10 குடும்பத்தினரும் பங்கேற்றனர். வசனத்தின்படி குடும்ப வாழ்க்கையை வடிவமைப்பது குறித்த போதனை பங்கேற்றோர்க்கு பயனளித்தது. 

அக்டோபர் : 26 பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள், வேத வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களுக்காகவும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார்.  




SEP 2025

                                             வடமேற்கு மண்டலம்


செப்டம்பர் 21 பெத்தியா, சன்பட்டியா மற்றும் பைரோகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 180 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில் வேத வசனத்தின் அடிப்படையில் வாலிபத்திற்கேற்றச்  செய்திகளும் மற்றும் நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.  மேலும், சுகௌலி, ஷாபூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளில் 155 வேர் பங்கேற்றனர். ஆகஸ்ட் 13 அன்று மஜௌலியா பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் மழையின் மத்தியிலும் 95 பேர் பங்கேற்று தேவ வார்த்தையைக் கேட்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் வாலிபர்கள் மற்றும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் எழுப்புதல் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 22 ராவத், கோடாசாஹன், ஹசன்பஜார் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில் 198 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஜக்ஹரா மற்றும் டும்ரியா இப்பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் பின் தொடர் ஊழியர்களின் மூலமாக 40க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களை சந்தித்து அவர்களை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்தவும் மற்றும் நிலைத்திருக்கச் செய்யவும் கர்த்தர் உதவி செய்தார். விசுவாசிகள் மத்தியில் ஜெப தாகம் பெருகவும், பணித்தளங்களில் சிறுவர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 23 சகௌலி, பெத்தியா, ரிவீல்கஞ்ச் மற்றும் வால்மீகி நகர் பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 27 பேர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெற்று வரும் புழழன நேறள ஊடரடி (புேஊ) ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர்  சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துரைக்கவும் மற்றும் வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும் கர்த்தர் உதவி செய்தார்.ஆகஸ்ட் 2 அன்று பிபாரியா கிராமத்தில் நடைபெற்ற சிறுவர் கூடுகையில், 40 பெரியவர்களும் கலந்துகொண்டு தேவ வசனத்தைக் கேட்டனர். 

செப்டம்பர் 24 பபிஷ்னுபுரா கிராமத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். மேலும், மோத்திஹாரி, படுக்காவ் போக்ரா டோலா ஆகிய பணித்தளங்களில் 12 புதிய குடும்பத்தினருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ராம்நகர் டும்ரியா கிராமத்தில் விசுவாசியின் வீட்டில் நடைபெற்ற கூடுகையில், 15 பேர் புதிதாக் கலந்துகொண்டு சுவிசேஷத்தைக் கேட்டனர். சிங்கர்வாஹா, டான், கோபர்ஹியா, ஜாமுவா தோலா ஆகிய கிராமங்களில் கைப்பிரதிகள் மற்றும் தனிநபர் ஊழியங்களின் மூலமாக நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும்,  பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 25 சாண்டி மற்றும் ரிவீல்கஞ்ச் பணித்தளங்களில் நடைபெற்று வரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும், விரைவில் கட்டி முடிக்கப்பட்டு ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும், விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையவும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவும் ஜெபிப்போம்.