மே 21 கோடாசன், பால்வாலியா, புஹனர், சிர்சா, கஸ்துர்பா, மோத்திஹாரி மற்றும் ராம் நகர் ஆகிய பணித்தளங்களில், நற்செய்திக் குழு ஊழிங்கள், ஞாயிறுப் பள்ளி ஊழியங்கள் மற்றும் பின் தொடர் ஊழியங்களின் மூலமாக, 557 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பில் வளரவும், இவர்களது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
மே 22 பெல்பனியா மற்றும் சிவான் பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூட்டங்களில், 50 பேர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். பகாஹா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 70 விசுவாசிகளும், நிமோயியா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 17 பேரும் கலந்துகொண்டனர். பணித்தங்களில் செய்யப்பட்டுவரும் தொடர் நற்செய்திப் பணிகள் நல்ல பலனைத் தர ஜெபிப்போம்.
மே 23 பெத்தியா பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 60 பேரும், ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 75 விசுவாசிகளின் குடும்பங்களும் மற்றும் வால்மீகிநகர் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 50 பேரும் பங்கேற்றனர். தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவை முன்னிறுத்தும் குடும்ப வாழ்க்கை வாழவும் போதனையுடன் ஆலோசனையையும் வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்கள் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும், உறவினர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
மே 24 யோகாபட்டி, பெல்வானியா, ஸ்ரீநகர், சப்ரா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில், விசுவாசிகள் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்தின் இரட்சிப்பிற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஏப்ரல் 4 அன்று ஹர்னடண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 20 வாலிபர் பங்கேற்றனர். பைரவ்கஞ்ச் பணித்தள ஆலயப் பிரச்சனைகள் மாற ஜெபிப்போம்.
மே 25 கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 34 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்க, மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருக்க ஜெபிப்போம்.





